கல்வியியல் நிறுவனங்களில், காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு எழுத, 556 பேர் விண்ணப்பித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், மாநில, மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களில், காலியாக உள்ள, முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளம்நிலை விரிவுரையாளர் பணியிடத்திற்கான, போட்டித்தேர்வு நடக்க உள்ளது. இதற்கு, கடந்த 15ம் தேதி முதல்,விண்ணப்பங்கள் பெறும் பணிகள் நடந்தன. கோவை மாவட்டத்தில், நல்லாயன் உயர்நிலைப்பள்ளியில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.
இதில், பேராசிரியர் பணியிடத்தில் தேர்வு எழுத, 556 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், தேர்வு நடைபெறும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment