Monday, September 19, 2016

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் முறைகேடு!

விரிவுரையாளர் பணிக்கான தேர்வில்வாட்ஸ் ஆப்பில் வினாத்தாள் வெளியானதால்தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி.,அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பட்டதாரி பெண்
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானஎஸ்.சி.இ.ஆர்.,டி.,யில்ஆசிரியர்களுக்கும்,பட்டதாரிகளுக்கும்ஆசிரியர் பயிற்சி வழங்க, 272 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு,டி.ஆர்.பி.சார்பில்நேற்று முன்தினம் எழுத்து தேர்வு நடந்தது.
மதுரை தேர்வு மையம் ஒன்றில்ஆங்கில விரிவுரையாளர் பதவிக்கு தேர்வு எழுதியதேனியை சேர்ந்த பட்டதாரி பெண்மொபைல் போனை தேர்வு அறைக்குள் கொண்டு வந்துவினாத்தாளை படம் பிடித்து,வாட்ஸ் ஆப் குரூப்பில் அனுப்பி உள்ளார். பின்பதில் வந்துள்ளதா எனபார்க்க முயன்ற போதுஅறை கண்காணிப்பாளரிடம் சிக்கினார்.
இதுகுறித்துடி.ஆர்.பி.உறுப்பினர் ராஜராஜேஸ்வரி மற்றும் எஸ்.சி.இ.ஆர்.டி.இணை இயக்குனர் குப்புசாமி ஆகியோர்அந்த பெண்ணிடம் விசாரித்துபோலீசில் புகார் அளித்தனர்.
ஆசிரியர் பதவிக்கான தேர்வைக்கூடபள்ளி கல்வித்துறையால்பிரச்னையின்றி நடத்த முடியவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அலட்சியம்
ஆசிரியர்களை நியமிக்கும்டி.ஆர்.பி.,யில்வெளிப்படை தன்மை இல்லைநியமனங்களில் நேர்மையான விதிகள் கடைபிடிக்கப்படுவது இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால்டி.ஆர்.பி.,அதிகாரிகளின் அலட்சியத்தால் தான்வினாத்தாள் வெளியான மோசமான நிலை ஏற்பட்டுள்ளது என,பட்டதாரிகளும்ஆசிரியர்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.

No comments:

Post a Comment