பள்ளி கல்வியில், 272 விரிவுரையாளர் பணியிடத்திற்கான தேர்வில்,முறைகேடுகளை தவிர்க்க, தேர்வு முடிவை விரைந்து வெளியிட,தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவுசெய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின், மாநில கல்வியியல்ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யில், 272விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களை நிரப்ப, செப்., 17ல், தேர்வு நடந்தது. மதுரை தேர்வுமையம் ஒன்றில், தேர்வு எழுதிய பெண் மூலம் வினாத்தாள், 'வாட்ஸ்ஆப்'பில் வெளியானது. இதுகுறித்து, விசாரணை நடந்துவருகிறது.தேர்வு முடிவை வெளியிட தாமதித்தால், இந்த பிரச்னையைமையப்படுத்தி, யாராவது வழக்கு தொடரலாம் என்பதால், தேர்வுமுடிவை விரைந்து வெளியிட,
டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. தேர்வுக்கான உத்தேச விடைவெளியிடப்பட்டு உள்ளது; தேர்வு எழுதியோர் தங்கள் கருத்துகளை,டி.ஆர்.பி.,க்கு அனுப்பலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது
No comments:
Post a Comment